என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த 2 பேர் கைது
Byமாலை மலர்28 Feb 2020 6:53 AM GMT (Updated: 28 Feb 2020 6:53 AM GMT)
மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பூக்கடை, ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு அதில் இருந்த எந்திரத்தை 2 வாலிபர்கள் உடைத்தனர். பொதுமக்கள் வந்ததும் அவர்கள் தப்ப ஓடி விட்டனர்.
பூக்கடை போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டை போட்டுப் பணம் வராததால் ஆத்திரத்தில் கண்ணாடியை கையால் அடிப்பது போல் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த சுதாகர், சூரியா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் வேலை தொடர்பாக சென்னைக்கு வந்ததாகவும் மதுபோதையில் பணம் எடுக்கும்போது பணம் வராததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்ததாக கூறி உள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X