search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    மதுரையில் இன்று பா.ஜனதா பேரணி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கண்டித்து மதுரையில் இன்று பாரதிய ஜனதா சார்பில் பேரணி நடைபெற்றது.
    மதுரை:

    புதுடெல்லியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 38 பேர்  பலியாயினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மதுரையில் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் முஸ்லிம் அமைப்பினர் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடும் முஸ்லிம்களிடம் மத உணர்வை தூண்டுபவர்களை கைது செய்ய வேண்டும்.

    வன்முறைக்கு வித்திடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் இன்று பேரணி நடைபெற்றது.

    மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருந்து தொடங்கிய பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றது.
    Next Story
    ×