என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ‘பார்க்கிங்’ பணிக்கு திரண்ட பட்டதாரிகள்-என்ஜினீயர்கள்
Byமாலை மலர்28 Feb 2020 5:24 AM GMT (Updated: 28 Feb 2020 5:24 AM GMT)
10-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் வந்து குவிவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதை பிரதிபலிக்கிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கி பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் அதற்கான செயலிகள் மூலம் எங்கு பார்க்கிங் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட பார்க்கிங் பகுதியில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு வாகனங்களை அங்கு பார்க்கிங் செய்யலாம்.
இந்த பார்க்கிங் ஸ்பாட்டுகளை தனியார் நிர்வகிப்பார்கள். கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்த முடியும். முதற்கட்டமாக 222 பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
இந்த மாதிரி வேலைக்கு ஓய்வு பெற்றவர்கள், அதிலும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களே வருவார்கள். ஆனால் தற்போது 1400 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள். வேறு வேலைகள் கிடைக்காததால் இந்த வேலைக்கு விண்ணப்பித்ததாக கூறினார்கள்.
சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறும்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக வேலைவாய்ப்பு இல்லை. எனவே இந்த வேலைக்கு வந்தேன் என்றார்.
10-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் வந்து குவிவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதை பிரதிபலிக்கிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கி பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் அதற்கான செயலிகள் மூலம் எங்கு பார்க்கிங் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட பார்க்கிங் பகுதியில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு வாகனங்களை அங்கு பார்க்கிங் செய்யலாம்.
இந்த பார்க்கிங் ஸ்பாட்டுகளை தனியார் நிர்வகிப்பார்கள். கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்த முடியும். முதற்கட்டமாக 222 பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
இந்த மாதிரி வேலைக்கு ஓய்வு பெற்றவர்கள், அதிலும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களே வருவார்கள். ஆனால் தற்போது 1400 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள். வேறு வேலைகள் கிடைக்காததால் இந்த வேலைக்கு விண்ணப்பித்ததாக கூறினார்கள்.
சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறும்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக வேலைவாய்ப்பு இல்லை. எனவே இந்த வேலைக்கு வந்தேன் என்றார்.
10-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வேலைக்கு பட்டதாரிகள் வந்து குவிவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதை பிரதிபலிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X