என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரியில் லாரி டிரைவர் திடீர் மரணம்
Byமாலை மலர்26 Feb 2020 9:55 AM GMT (Updated: 26 Feb 2020 9:55 AM GMT)
நாங்குநேரியில் லாரி டிரைவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் சோமேஸ்வரராவ் (வயது 52). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சரக்குகள் ஏற்றி சென்றார்.
அங்கு சரக்குகளை இறக்கி விட்டு நேற்று ஆந்திராவிற்கு திரும்பி வந்தார். அவருடன் லாரி கிளீனர் வெங்கடேஸ்வரராவ் வந்தார். நேற்று இரவு அவர்கள் நாங்குநேரி அருகே வந்தபோது லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சோமேஸ்வரராவ் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளீனர் வெங்கடேஸ்வரராவ் கொடுத்த புகாரின் பேரில், நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X