என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவர் பிரிந்து சென்றதால் பெண் தற்கொலை - 2 குழந்தைகள் தவிப்பு
Byமாலை மலர்25 Feb 2020 10:05 AM GMT (Updated: 25 Feb 2020 10:05 AM GMT)
புதுச்சேரி அருகே கணவர் பிரிந்து சென்றதால் வருமானம் இல்லாமல் தவித்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கலைவள்ளி (வயது 39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து கலைவள்ளி தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே சரியான வேலை கிடைக்காததால் கலைவள்ளி குடும்பம் நடத்தவும், மகன்களை படிக்க வைக்கவும் சிரமப்பட்டு வந்தார்.
அவ்வப்போது கலை வள்ளிக்கு அவரது அண்ணன் பண உதவி செய்து வந்தார். ஆனாலும், அந்த பணம் போதுமானதாக இல்லை. இதனால் கலைவள்ளி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கலைவள்ளி சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.
இதில் மயங்கி கிடந்த கலைவள்ளியை அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு கலைவள்ளி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரின் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தை பிரிந்து விட்டு சென்ற நிலையில் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் 2 குழந்தைகளும் தவித்து வருகிறார்கள்.
புதுவை குயவர் பாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கலைவள்ளி (வயது 39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து கலைவள்ளி தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே சரியான வேலை கிடைக்காததால் கலைவள்ளி குடும்பம் நடத்தவும், மகன்களை படிக்க வைக்கவும் சிரமப்பட்டு வந்தார்.
அவ்வப்போது கலை வள்ளிக்கு அவரது அண்ணன் பண உதவி செய்து வந்தார். ஆனாலும், அந்த பணம் போதுமானதாக இல்லை. இதனால் கலைவள்ளி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கலைவள்ளி சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.
இதில் மயங்கி கிடந்த கலைவள்ளியை அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு கலைவள்ளி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரின் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தை பிரிந்து விட்டு சென்ற நிலையில் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் 2 குழந்தைகளும் தவித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X