என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்: புகார் வாங்க மறுத்த பெண் ஏட்டு மீது எஸ்.பி.யிடம் புகார்
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமம், கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 51) இவர் போலீஸ் உளவாளியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும், இவரது தாய் மாமன் ஒருவருக்குமிடையே கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையும் நடந்தது. சம்பவத்தன்று அறிவழகன் அவரது ஊர் பஸ் நிறுத்தம் நிழற்குடையில் உட்கார்ந்திருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஷ் (28) என்பவர் அறிவழகனிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அறிவழகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அங்கு பணியிலிருந்த பெண் ஏட்டு ரஜினி என்பவர் அவரது புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிவழகன் தன்னைத்தாக்கிய பிரகதீஷ் என்பவர் பெண் ஏட்டு ரஜினியின் உறவினர் என்பதால் தனது புகாரை வாங்க மறுத்ததாகவும், இதனால் தான் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஏட்டு ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி. மகேஷ்வரனிடம் புகார் கொடுத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்