என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியை அடுத்துள்ள அட்டப்பட்டியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு தற்போது கோவில் திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை சேக்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 12 பேர் ஷேர்ஆட்டோவில் கோவிலுக்கு புறப்பட்டனர். கோட்டப்பட்டி 4 வழி சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
ஆட்டோவில் பயணம் செய்த சேக்கிப்பட்டியை சேர்ந்த பால்ராஜ், அவரது மனைவி சுலோச்சனா மற்றும் பாண்டியம்மாள், ஜோதியம்மாள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிய சங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்