என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது
Byமாலை மலர்21 Feb 2020 7:27 AM GMT (Updated: 21 Feb 2020 9:40 AM GMT)
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை:
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுவது வழக்கம்.
போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது.
கடந்த 13-ந் தேதி தங்கம் மீண்டும் பவுனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.3,889-க்கும், பவுன் ரூ.31 ஆயிரத்து 112-க்கும் விற்பனை ஆனது.
நேற்றும் பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கும், கிராம் ரூ.3,978-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 12-ஆக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 96-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அது உலக பொருளாதாரத்தை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்கு சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தொழில் துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்த பெரும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். பங்கு சந்தையின் முதலீடு குறைந்ததால் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
இரண்டாவதாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்து தங்கம் விலை வரலாற்றிலேயே ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
ஒரு கிராம் ரூ.4,012 ஆக உயர்ந்து உள்ளது. தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளதால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 300-ஆக உயர்ந்தது. கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை உயர்வு (ஒரு கிராமுக்கு) விவரம் வருமாறு:-
தேதி விலை (ரூ)
11.02.2020 3872
12.02.2020 3862
13.02.2020 3889
14.02.2020 3889
15.02.2020 3924
16.02.2020 3924
17.02.2020 3902
18.02.2020 3926
19.02.2020 3965
20.02.2020 3978
21.02.2020 4012
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.
இதனால் சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.
போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது.
கடந்த 13-ந் தேதி தங்கம் மீண்டும் பவுனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.3,889-க்கும், பவுன் ரூ.31 ஆயிரத்து 112-க்கும் விற்பனை ஆனது.
நேற்றும் பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கும், கிராம் ரூ.3,978-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 12-ஆக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 96-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அது உலக பொருளாதாரத்தை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்கு சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தொழில் துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்த பெரும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். பங்கு சந்தையின் முதலீடு குறைந்ததால் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
இரண்டாவதாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்து தங்கம் விலை வரலாற்றிலேயே ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
ஒரு கிராம் ரூ.4,012 ஆக உயர்ந்து உள்ளது. தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளதால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 300-ஆக உயர்ந்தது. கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை உயர்வு (ஒரு கிராமுக்கு) விவரம் வருமாறு:-
தேதி விலை (ரூ)
11.02.2020 3872
12.02.2020 3862
13.02.2020 3889
14.02.2020 3889
15.02.2020 3924
16.02.2020 3924
17.02.2020 3902
18.02.2020 3926
19.02.2020 3965
20.02.2020 3978
21.02.2020 4012
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X