என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே வைக்கோல் லாரியில் திடீர் தீ விபத்து
Byமாலை மலர்20 Feb 2020 4:09 PM GMT (Updated: 20 Feb 2020 4:09 PM GMT)
பாபநாசம் அருகே வைக்கோல் லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே மணக்கால் கிராமத்தில் ஒரு லாரியில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் புறப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் நீல மேகம் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லாரியிலிருந்து தீ பிடித்து வைக்கோல் கட்டுகள் மீது தீ பரவி மளமளவென எரிந்துகொண்டிருந்தது.
அப்போது அங்கே வயலிலிருந்த விவசாயி. ஸ்ரீதர் என்பவர் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலை வாணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் லாரியிலிருந்த தளவாட சாமான்கள் வைக்கோல் போர் எரிந்ததில் ரூ.50 ஆயிரம் சேதம் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X