என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்திகுப்பம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி- ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்
Byமாலை மலர்20 Feb 2020 2:28 PM GMT (Updated: 20 Feb 2020 2:28 PM GMT)
கந்திகுப்பம் அருகே கள்ளத்தனமாக மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சின்னமட்டாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சின்னமட்டாரப்பள்ளி ராஜீலு மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு குட்டையில் கள்ளத்தனமான டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள், டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்குபதிவு செய்து, டிப்பர் லாரி உரிமையாளரும், ஓட்டுனருமான மேல்காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மார்ட்டின்சகாயராஜ் (வயது 28), ஜே.சி.பி. எந்திர டிரைவரான எலத்தகிரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சிதம்பரம் (வயது 38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X