என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பதை த.மா.கா. வரவேற்கிறது- ஜி.கே.வாசன்
Byமாலை மலர்20 Feb 2020 6:39 AM GMT (Updated: 20 Feb 2020 6:39 AM GMT)
பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், திருப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பதை த.மா.கா. வரவேற்கிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பான வகையில் சிவந்தி ஆதித்தனாருக்கு பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைப்பது பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
பாமர, ஏழைகள் படிக்கும் வகையில் பத்திரிகை துறையை வழி நடத்தியது, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு துறையில் சிறப்பாக பணியாற்றியது, கல்வி, ஆன்மீகம், திருப்பணிகள் தொழில் துறை உள்ளிட்டவைகளில் மிகச்சிறந்த பணியாற்றிய சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பதை த.மா.கா. வரவேற்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை தவிர்த்து யாரும் எதையும் செய்துவிட முடியாது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கிக்காக போராட்டம் நடத்த கூடாது. வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தெற்கு மாவட்ட தலைவர் விஜய சீலன், மாநில துணைச் செயலாளர் மால்மருகன், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், முன்னாள் எம்.பி. ராம்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பான வகையில் சிவந்தி ஆதித்தனாருக்கு பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைப்பது பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை தவிர்த்து யாரும் எதையும் செய்துவிட முடியாது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கிக்காக போராட்டம் நடத்த கூடாது. வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தெற்கு மாவட்ட தலைவர் விஜய சீலன், மாநில துணைச் செயலாளர் மால்மருகன், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், முன்னாள் எம்.பி. ராம்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X