search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தா.பேட்டையில் மணல் கடத்திய 2 பேர் கைது

    தா.பேட்டை அருகே மாட்டு வண்டியில் அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வீரமச்சான்பட்டி பகுதி அய்யாற்றில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் அள்ளி கொண்டிருப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் மற்றும் போலீசார் விரைந்து சென்று அய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது65), செல்வராஜ் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று தா.பேட்டை அடுத்த வாளவந்தி தாதம்பண்ணை அய்யாற்று பகுதியில் மர்மநபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். 

    இந்த நிலையில் அப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராமநிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா தலைமையில் வருவாய் துறையினர் விரைந்துசென்று மணல் திருட்டில் ஈடுபட்டதாக சின்ன வேளகாநத்தம் பகுதியை சேர்ந்த திருமலை (70) என்பவரை பிடித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருமலையை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பிஓடி தலைமறைவான வாளவந்தி ஊராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜை (57) போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×