search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X
    இளம்பெண் மாயம்

    அய்யம்பேட்டை அருகே இளம்பெண் மாயம்

    அய்யம்பேட்டை அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகள் கேத்தரின் சிசிலியா (வயது 21). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சேத்தரின் சிசிலியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். விடியற்காலையில் அவர் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது கேத்தரின் சிசிலியாவை காணாமல் திடுக்கிட்டனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் தங்களது உறவினர் வீடுகளில் கேத்தரின் சிசிலியாவை தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மைக்கேல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் சப்இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×