என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூனையை சீனாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் - ஜிகே வாசன் அறிக்கை
Byமாலை மலர்17 Feb 2020 7:11 AM GMT
சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதனை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் அதனை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடிய நடவடிக்கையை சென்னைத் துறைமுகம் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்ற வேளையில் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கப்பலில் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டில் உயிருள்ள பூனை ஒன்று இருந்ததும், பாம்பு இருந்ததாக சொல்வதும் சந்தேகத்திற்கு வழி வகுக்கும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் தமிழக சுகாதாரத்துறை அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய அரசும் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தில் இருந்தும், அச்சத்திலும் இருந்தும் பொது மக்கள் மீளும் வரையில் சீனாவில் இருந்து எப்பொருளையும், மனிதரையும், எந்த விலங்குகளையும் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக அனுமதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சென்னைத் துறைமுக அதிகாரிகள் துறைமுக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது முறையானது என்றாலும் கூட இன்றையச் சூழலில் சீனாவில் இருந்து வரும் உயிருள்ள ஜீவன்களையும் மற்றும் உயிரற்ற எப்பொருளையும் அனுமதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கப்பலை கண்காணித்து, அதில் உள்ள அனைத்தையும் சோதனை செய்த பிறகே இறக்குமதிக்கு அனுமதி செய்ய முடிவு செய்ய வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக நம் நாட்டிற்கு ஏதேனும் கப்பல் வர இருந்தால் அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு கொரோனோ வைரஸ் சம்பந்தமாக எந்தவித சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் இடம் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பிறகே அனுமதி கொடுப்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.
எனவே தமிழக துறைமுகங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கடல்வழியாக வரும் கப்பல்களை சோதனை செய்த பிறகே அனுமதி செய்திடவும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தேகமும் எழாத வண்ணம் தொடர் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் அதனை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடிய நடவடிக்கையை சென்னைத் துறைமுகம் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்ற வேளையில் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல உணவுப்பொருட்கள் இருந்த கண்டெய்னரில் பாம்பு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பூனை மற்றும் பாம்பு இருந்ததாக வரும் செய்தியால் மக்கள் அச்சப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த அச்சத்திற்கு இடம் இருக்கக்கூடாது.
அதாவது கப்பலில் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டில் உயிருள்ள பூனை ஒன்று இருந்ததும், பாம்பு இருந்ததாக சொல்வதும் சந்தேகத்திற்கு வழி வகுக்கும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் தமிழக சுகாதாரத்துறை அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய அரசும் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தில் இருந்தும், அச்சத்திலும் இருந்தும் பொது மக்கள் மீளும் வரையில் சீனாவில் இருந்து எப்பொருளையும், மனிதரையும், எந்த விலங்குகளையும் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக அனுமதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சென்னைத் துறைமுக அதிகாரிகள் துறைமுக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது முறையானது என்றாலும் கூட இன்றையச் சூழலில் சீனாவில் இருந்து வரும் உயிருள்ள ஜீவன்களையும் மற்றும் உயிரற்ற எப்பொருளையும் அனுமதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கப்பலை கண்காணித்து, அதில் உள்ள அனைத்தையும் சோதனை செய்த பிறகே இறக்குமதிக்கு அனுமதி செய்ய முடிவு செய்ய வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக நம் நாட்டிற்கு ஏதேனும் கப்பல் வர இருந்தால் அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு கொரோனோ வைரஸ் சம்பந்தமாக எந்தவித சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் இடம் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பிறகே அனுமதி கொடுப்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.
எனவே தமிழக துறைமுகங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கடல்வழியாக வரும் கப்பல்களை சோதனை செய்த பிறகே அனுமதி செய்திடவும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தேகமும் எழாத வண்ணம் தொடர் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X