search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    திண்டுக்கல் பலகாரக்கடையில் திடீர் தீ விபத்து

    திண்டுக்கல் பலகாரக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்தவர் அருந்ததி (வயது 55). தனது வீட்டில் குடிசை தொழிலாக பலகாரம் தயாரிக்கும் பணி செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பலகாரம் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிதறிய தீப்பொறி அங்கு இருந்த பொருட்கள் மீது பட்டு தீ பற்றி எரிந்தது.

    மேலும் தீ மளமளவென பரவியதால் அச்சமடைந்த அருந்ததி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். தீ பற்றி எரிவதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருந்த போதும் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் அருந்ததி கவலையடைந்தார். மேலும் இது குறித்து நகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×