என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கண்ணமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை கரம் பிடித்த நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள படவேடு ராமநாதபுரம் கூட்ரோடு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (42). இவரது மகள் விநோதினி (19) என்பவர் கேளூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 8-ம் தேதி காலை கல்லூரி சென்ற வினோதினி, மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் வினோதினி தந்தை ராஜேந்திரன் சந்தவாசல் போலீசில் புகார் செய்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி,சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநோதினியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வினோதினி (19), தனது உறவினர் மகன் சசிகுமார் (24) என்பவரை திருமணம் செய்து கொண்டு, நேற்று கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி முன்னிலையில் தஞ்சமடைந்தார்.
தொடர்ந்து இருகுடும்பத்தினருடமும் சமரசம் செய்து விநோதினியை, அவரது கணவர் சசிகுமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வினோதினி கல்லூரி செல்லும்போது சசிகுமாரின், ஆட்டோவில் தினமும் செல்லும்போது காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் விநோதினிக்கு, அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதனால் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். என போலீசில் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்