என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரத்தில் வருவாய் அலுவலர் கணவர் தற்கொலை
தாராபுரம்:
தாராபுரம் பார்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு (43). கார் டிரைவர். இவரது மனைவி சுதா. வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வேலு கோபித்து கொண்டு தாராபுரம் உப்புத்துறை பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அவரது தாய் கடந்த 2 நாட்களாக வெளியூர் சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த வேலு வீட்டின் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை வேலு வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் வேலு வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் மின் விசிறியில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்