search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    நெல்லை பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் மாயம்

    நெல்லை பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை சேர்ந்தவர் ரசூல் நூர் முகம்மது (வயது38). இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை செய்து வந்தார். இவர் கட்டிடம் கட்டும் பணிக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந் 29-ந்தேதி செல்போனை வீட்டில் வைத்து விட்டு கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

    அதன்பிறகு ரசூல் நூர் முகம்மது வீடு திரும்ப வில்லை. அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. உறவினர் வீடுகளிலும் அவரை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. இதனால் அவரது மனைவி ஹசீனா (36) பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரசூல் நூர் முகம்மதுவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×