என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 மாணவர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்4 Feb 2020 9:57 AM GMT (Updated: 4 Feb 2020 9:57 AM GMT)
திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 800 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் திருவிக அரசினர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படிப்பவர் தமிழ்வாணன் (வயது 20). இவருக்கும் வன்மீகபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீநாத் கல்லூரியில் படிக்கும் தமிழ்வாணனை தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநாத் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிக கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தடையை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது தொடர்பாக திருவாரூர் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் கணபதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் சுர்ஜித், சேது, சுதர்மன், ஆகாஷ், ஜெயராஜ் உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் திருவிக அரசினர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படிப்பவர் தமிழ்வாணன் (வயது 20). இவருக்கும் வன்மீகபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீநாத் கல்லூரியில் படிக்கும் தமிழ்வாணனை தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநாத் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிக கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தடையை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது தொடர்பாக திருவாரூர் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் கணபதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் சுர்ஜித், சேது, சுதர்மன், ஆகாஷ், ஜெயராஜ் உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X