search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தச்சம்பட்டு அருகே என்ஜினீயரிங் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    தச்சம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த என்ஜினீயரிங் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 23). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 26-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி வி‌ஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    தச்சம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×