search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலையில் வீட்டில் சாராயம் பதுக்கி விற்பனை- பெண் கைது

    திருவண்ணாமலையில் வீட்டில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 11வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சாராயம்- கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அங்கு சாராயம் மற்றும்  கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 லிட்டர் சாராயம், 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதனை பதுக்கி வைத்திருந்த ஆஷா என்ற பெண்ணை கைது செய்தனர்.

    Next Story
    ×