என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பத்தூர் அருகே கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கந்திலி அடுத்த சாந்தகுப்பத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் சுனந்தா (வயது 28) நத்தம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து விட்டு சென்றார். உடனடியாக மாப்பிள்ளை பிடித்துள்ளதா? என்று சுனந்தாவின் பெற்றோர் கேட்டுள்ளார்கள். அதற்கு எந்தவித பதிலும் கூறாமல் மவுனமாக யாரிடமும் வீட்டில் பேசாமல் இருந்துள்ளார். அவரது தாயார் வீட்டில் இருந்து ஆடு மேய்க்க சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தொங்கினார்.
வீட்டிற்கு வந்து பார்த்த அவரது தந்தை சுனந்தாவை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்