search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college professor suicide"

    • செல்லத்துரை சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள விஸ்வநாதபுரம் இ.கே.தேவர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், செல்லத்துரை(வயது 28) என்ற மகனும் உள்ளனர்.

    செல்லத்துரை சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று செல்லத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். செல்லத்துரை ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரை காதலிக்கவில்லை என்றும், திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் செல்லத்துரை நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஒருதலை காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதனப்பள்ளியில் கல்லூரி பேராசிரியர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஐதராபாத்தை சேர்ந்த வீரதிம்மையா மகன் அனில்குமார் (வயது 32). இவருடைய மனைவி ரஜிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அனில்குமார் கடந்த 18-ந் தேதி சித்தூர் அடுத்த குரபலகோட்டா அங்கல்லு அருகில் உள்ள ஒரு என்ஜினீரியங் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக வேலையில் சேர்ந்தார்.

    மதனப்பள்ளியில் பெத்த திப்பசமுத்திரம் சாலையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் கல்லூரிக்கு வராததால் உடன் பணிபுரிபவர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் விடுதி மேலாளரை தொடர்பு கொண்டு அனில்குமாரிடம் பேச வேண்டும் என்று கூறினர்.

    மேலாளர் சென்று அனில்குமார் தங்கியிருந்த அறையை தட்டினார். கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அனில்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மதனப்பள்ளி 2 டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து சென்று விடுதி அறை கதவை உடைத்து பிணத்தை மீட்டனர். 2 நாட்களுக்கு முன்னரே அனில்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    போலீசார் அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக அவருடைய மனைவியிடம் பேசியது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×