search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் உயிரிழப்பு
    X
    பெண் உயிரிழப்பு

    குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த பெண் உயிரிழப்பு

    குடும்ப தகராறில் மனமடைந்த பெண் தீக்குளித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேளகொண்டப் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 34). தளி அருகே உள்ள ஜவளகிரியை சொந்த ஊராக கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் 3 பேரும் ஜவளகிரியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கயுள்ளனர். 

    இந்த நிலையில் மல்லிகாவிற்கும், தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்ட முகிலாளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக வெங்கடேசுக்கும், மல்லிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது மனமுடைந்த காணப்பட்ட மல்லிகா திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். அருகில் இருந்த வெங்கடேஷ் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் வெங்கடேசுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    இதனால் 2 பேரும் வலியால் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×