என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே வாலிபர் அடித்து கொலை?
Byமாலை மலர்24 Jan 2020 4:33 PM GMT (Updated: 24 Jan 2020 5:12 PM GMT)
தருமபுரி அருகே வீட்டில் மர்மமான முறையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி
தருமபுரியை அடுத்துள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராஜேந்திரன். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரன் தாளநத்தம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் குள்ளனூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு நேற்றுமுன்தினம் இரவு அறையில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்றுமதியம் வரை ராஜேந்திரன் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சத்தம் எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அறையில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் சாவில் மர்மம் இருப்பதால் அவரை அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X