என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை ரெயின்போநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருக்காமு. இவரது மனைவி கலாரஞ்சனி (வயது29). இவர் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு வலியுறுத்தி வந்தார்.
ஆனால் கலாரஞ்சனிக்கு செவ்வாய்தோஷம் இருந்ததால் அதற்கேற்ற வரண் கிடைக்கவில்லை. இதனால் திருமணம் கைகூடாமல் தள்ளி கொண்டே போனது. இந்த நிலையில் கலாரஞ்சனி நேற்று மாலை தனது பெற்றோரிடம் திருமணத்துக்கான ஏற்பாட்டை செய்யவில்லை என கூறி வருத்தப்பட்டு வாக்குவாதம் செய்தார்.
மேலும் தனக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்க மாட்டிர்கள், கருமாதி தான் செய்து வைப்பிர்கள் என விரக்தியுடன் கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார்.
சாப்பிடுவதற்கு வெகுநேரமாக கலாரஞ்சனி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் கலாரஞ்சனி சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கலாரஞ்சனியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலா ரஞ்சனி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். திருமண ஏக்கத்தில் ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்