search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருவட்டார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    திருவட்டார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    நாகர்கோவில்:

    திருவட்டாரை அடுத்த விரலிகாட்டுவிளை தேரான் குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின் (வயது 35).

    இவர், கேரளா மாநிலம் திருச்சூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊரான தேரான் குழி பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இவர், கடந்த 6-ந்தேதி வீட்டிற்கு வந்த அவர் வீட்டினை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.

    பின்னர் அவர், நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள், உடைக்கப்பட்டு கதவு, பீரோ ஆகிய இடங் களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். கொள்ளை நடந்த வீட்டின் அருகே கண்காணிப்பு கேமிரா உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×