என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மது குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பிராமினாள் வீதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் பழனிவேலு. (வயது 33). திருமணம் ஆகாத இவர் டிரைவர் வேலை செய்து வந்தார்.
கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேலு குடி போதையில் தவறி விழுந்த போது முதுகுத்தண்டு உடைந்து போனது.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று டிரைவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையான பழனிவேலு அவ்வப்போது தனது தாய் சுமதியிடம் பணம் வாங்கி மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஏற்கனவே குடிபோதையில் இருந்த பழனிவேலு மீண்டும் மது குடிக்க தனத தாயிடம் பணம் கேட்டார். ஆனால், சுமதி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து பணம் தராததால் பழனிவேலு தனது தாயிடம் தகராறு செய்தார். அப்போது பழனிவேவை வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பழனிவேலு வீட்டின் மாடிக்கு சென்று மின் விசிறியில் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் சுமதி முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்