என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்
Byமாலை மலர்20 Jan 2020 12:53 PM GMT (Updated: 20 Jan 2020 12:53 PM GMT)
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் பகுதியில் வசித்து வருபவர் தமிழருவி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு கும்பகோணம் உப்புக்கார தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் ஒரு கார் வேகமாக வந்துள்ளது. இதனால் தமிழருவி அதிர்ச்சியடைந்து விலகி சென்றார். அனால் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென இறங்கி தமிழருவியை பாட்டிலால் குத்தியதோடு அரிவாளாலும் வெட்டினர்.
இதைக்கண்ட தமிழருவியின் மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் உறவினர் பிரகாஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தடுக்க முயன்றதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரில் வந்த மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தமிழருவி கொடுத்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கும்பகோணம் பாத்திமாபுரம் மார்ட்டின் மகன் அலெக்ஸ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த தென்னவன், விமல் உள்பட 9 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் பகுதியில் வசித்து வருபவர் தமிழருவி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு கும்பகோணம் உப்புக்கார தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் ஒரு கார் வேகமாக வந்துள்ளது. இதனால் தமிழருவி அதிர்ச்சியடைந்து விலகி சென்றார். அனால் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென இறங்கி தமிழருவியை பாட்டிலால் குத்தியதோடு அரிவாளாலும் வெட்டினர்.
இதைக்கண்ட தமிழருவியின் மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் உறவினர் பிரகாஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தடுக்க முயன்றதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரில் வந்த மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தமிழருவி கொடுத்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கும்பகோணம் பாத்திமாபுரம் மார்ட்டின் மகன் அலெக்ஸ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த தென்னவன், விமல் உள்பட 9 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X