என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே கடை மேல்கூரையை உடைத்து ரூ.27 ஆயிரம் கொள்ளை
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர், அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷோபனா, (29). இவர், ஆரல்வாய்மொழியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
முத்துவின் தாயார் மாரியம்மாளும், இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்து, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். ஷோபனாவும் நேற்றிரவு நூற்பாலைக்கு இரவு பணிக்கு சென்றிருந்தார்.
வீட்டில் மாரியம்மாளும், குழந்தைகளும் இருந்தனர். இன்றுகாலை மாரியம்மாள் கடையை திறப்பதற்காக சென்றார். கடையை திறந்த போது, கடையையொட்டி இருந்த கழிவறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணமும் சுய உதவிக்குழுக்களில் இருந்து பிரித்து வைக்கப்பட்ட பணம் ஆகும். பணம் கடைக்குள் இருப்பதை தெரிந்தே மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் முத்துவிற்கு நன்கு பழக்கப்பட்டவர்களே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்