என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை
Byமாலை மலர்18 Jan 2020 10:10 AM GMT (Updated: 18 Jan 2020 10:10 AM GMT)
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் இதமான மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் வானம் கருமேகத்துடன் காணப்பட்டது.
வல்லம்:
தஞ்சையை அடுத்த வல்லத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பம் ஆகி உள்ள நிலையிலும் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணி பொழிவு அதிகமாகவே காணப்படுகின்றது. காலை 8 மணிக்கு மேல் வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.
பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே செல்கின்றனர். வல்லத்தில் நேற்றிரவு பனிப்பொழிவு அதிகமாகவே காணப்பட்டது. தஞ்சை-திருச்சி சாலையில் சென்று பஸ் மற்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே சென்றது.
இந்த நிலையில் இன்று காலை வல்லத்தில் திடீரென சாரல் மழை பொழிந்தது. பனிப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சி விலகாத நிலையில் சாரல் மழையும் பொழிந்து பரவசமாக காணப்பட்டது.
வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் பலத்த மழையில் நனைந்து சென்றனர்.
வல்லத்தில் சீதோஷ்ண நிலையும் ஊட்டி, கொடைக்கானலை போன்று காணப்பட்டது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இன்று காலை வரை மழை பெய்தது. இதனால் தற்போது வெயில் அடிப்பதை யொட்டி உப்பு உற்பத்தி மராமத்து பணியை தொழிலாளர்கள் தொடங்கி நிலையில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் சம்பா நெல் அறுவடை நிலையில் உள்ள வயல்களில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வேதாரண்யத்தில் இன்று காலை வரை 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பம் ஆகி உள்ள நிலையிலும் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணி பொழிவு அதிகமாகவே காணப்படுகின்றது. காலை 8 மணிக்கு மேல் வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.
பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே செல்கின்றனர். வல்லத்தில் நேற்றிரவு பனிப்பொழிவு அதிகமாகவே காணப்பட்டது. தஞ்சை-திருச்சி சாலையில் சென்று பஸ் மற்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே சென்றது.
இந்த நிலையில் இன்று காலை வல்லத்தில் திடீரென சாரல் மழை பொழிந்தது. பனிப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சி விலகாத நிலையில் சாரல் மழையும் பொழிந்து பரவசமாக காணப்பட்டது.
வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் பலத்த மழையில் நனைந்து சென்றனர்.
வல்லத்தில் சீதோஷ்ண நிலையும் ஊட்டி, கொடைக்கானலை போன்று காணப்பட்டது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இன்று காலை வரை மழை பெய்தது. இதனால் தற்போது வெயில் அடிப்பதை யொட்டி உப்பு உற்பத்தி மராமத்து பணியை தொழிலாளர்கள் தொடங்கி நிலையில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் சம்பா நெல் அறுவடை நிலையில் உள்ள வயல்களில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வேதாரண்யத்தில் இன்று காலை வரை 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X