என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே புதுப்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்16 Jan 2020 10:33 AM GMT (Updated: 16 Jan 2020 10:33 AM GMT)
திருவாரூர் அருகே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு உடல் மெலிந்து ஒல்லியாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த இருவீட்டாரும் சிவரஞ்சனி திட்டி ஒழுங்காக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இறந்தார்.
இதுதொடர்பாக இவரது தந்தை கோவிந்தராஜ் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு உடல் மெலிந்து ஒல்லியாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த இருவீட்டாரும் சிவரஞ்சனி திட்டி ஒழுங்காக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இறந்தார்.
இதுதொடர்பாக இவரது தந்தை கோவிந்தராஜ் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X