என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகை- பூஜை பொருட்கள், காய்கறி, பூக்கள் விலை உயர்வு
Byமாலை மலர்11 Jan 2020 6:29 AM GMT (Updated: 11 Jan 2020 6:29 AM GMT)
கோயம்பேடு சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த வருடம் பொருட்கள் விலை உயர்வாக உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, பொங்கல் பொருட்கள் குவிந்துள்ளன.
8-ந்தேதி முதல் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த வருடம் பொருட்கள் விலை உயர்வாக உள்ளது.
மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.35 முதல் ரூ.60 வரை, வாழைக்கன்றுகள் ஒரு ஜோடி ரூ.50, சாமந்தி பூ ஒரு முழம் ரூ.30, கதம்பம், கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.35க்கு விற்கப்படுகின்றன.
கோயம்பேடு பூ மார்கெட்டிற்கு தமிழகத்தின் சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் பெங்களூர், ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லி ரூ.1,500க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் விலை உயர்ந்து ரூ.2,100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாமந்தி பூ வரத்து அதிகம் காரணமாக விலை பெரிய அளவில் உயரவில்லை. நாளை, நாளை மறுதினம் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.
பூசணிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30க்கும், தேங்காய் ஒன்று சிறியது ரூ.10க்கும், பெரியது ரூ.25க்கும் விற்கப்படுகிறது.
மா இலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10-வாழை இலை ரூ.5க்கு விற்கப்படுகின்றன.
சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு ஒரு கிலோ ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது.
கரும்பு விளைச்சல் அதிகம் காரணமாக வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இப்போது ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, பொங்கல் பொருட்கள் குவிந்துள்ளன.
8-ந்தேதி முதல் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வழக்கத்தைவிட இந்த வருடம் பொருட்கள் விலை உயர்வாக உள்ளது.
மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.35 முதல் ரூ.60 வரை, வாழைக்கன்றுகள் ஒரு ஜோடி ரூ.50, சாமந்தி பூ ஒரு முழம் ரூ.30, கதம்பம், கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.35க்கு விற்கப்படுகின்றன.
கோயம்பேடு பூ மார்கெட்டிற்கு தமிழகத்தின் சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் பெங்களூர், ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லி ரூ.1,500க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் விலை உயர்ந்து ரூ.2,100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூ.400முதல் ரூ.500வரை விற்று வந்த ஜாதிமல்லி இன்று ரூ.700 க்கும், ரூ.600க்கு விற்ற முல்லை ரூ.900க்கும், ரூ.40க்கு விற்ற சாமந்தி ரூ.100க்கும், ரூ.80க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.150க்கும், ரூ.300க்கு விற்ற கனகாம்பரம் ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூ வியாபாரி ரவி கூறுகையில்:-
சாமந்தி பூ வரத்து அதிகம் காரணமாக விலை பெரிய அளவில் உயரவில்லை. நாளை, நாளை மறுதினம் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.
பூசணிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30க்கும், தேங்காய் ஒன்று சிறியது ரூ.10க்கும், பெரியது ரூ.25க்கும் விற்கப்படுகிறது.
மா இலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10-வாழை இலை ரூ.5க்கு விற்கப்படுகின்றன.
சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு ஒரு கிலோ ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது.
கரும்பு விளைச்சல் அதிகம் காரணமாக வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இப்போது ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X