என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கோட்டை அருகே மண்பானை சூடுபடுத்தும் கொட்டகையில் தீ விபத்து
Byமாலை மலர்10 Jan 2020 12:30 PM GMT (Updated: 10 Jan 2020 12:30 PM GMT)
செங்கோட்டை அருகே மண்பானை சூடுபடுத்தும் கொட்டகையில் தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் மற்றும் கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் மண்பாண்டம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண்பானைகள் செய்து கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
மண்பாண்டங்களை சூடாக்கி உறுதிப்படுத்த கொட்டகை ஒன்றில் இட்டு சுள்ளை என்று சொல்லும் தீவைத்து சுட வைப்பார்கள்.
இந்நிலையில் இன்று இந்த பகுதியில் பல மண்பாண்டங்களை உருவாக்கி இந்த பகுதியில் சுள்ளையில் தீ வைத்தனர். அப்போது திடீரென்று கொட்டகையில் தீ பற்றியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் மற்றும் கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X