search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலுக்கு புகுந்த லாரியை படத்தில் காணலாம்.
    X
    ஓட்டலுக்கு புகுந்த லாரியை படத்தில் காணலாம்.

    வில்லியனூர் அருகே தாறுமாறாக வந்த லாரி ஓட்டலுக்குள் புகுந்தது

    வில்லியனூர் அருகே இன்று காலை மது போதையில் தாறுமாறாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஓட்டல் மீது மோதினார்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் இருந்து செல்லும் சாலையில் பிள்ளையார் குப்பம் - ராமநாதபுரம் சந்திப்பில் ரவி என்பர் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை 9 மணியளவில் இந்த ஓட்டலில் 5-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது செல்லிப்பட்டில் இருந்து தாறுமாறாக வந்த லாரி ஓட்டல் மீது மோதி புகுந்தது. இதில் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது. மேலும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் லாரியை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிரைவரை சரமாரியாக தாக்கினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரையும், லாரியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து நடந்த போது எதிர்புறத்தில் பள்ளி, கல்லூரி செல்ல மாணவர்களும், அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பஸ்சுக்கு காத்து இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×