என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் அருகே இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் அருகே, காட்டூர் முதலியார் தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் பிரதீபா (வயது 22). இவருக்கும், நாகை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கும் திருமணம் செய்வதாக இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு வரும் 30 ம் தேதி அன்று திருவாரூரில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக, பிரதீபாவின் பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று ரவிச்சந்திரன் தனது மனைவியுடன் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர்.
மீண்டும் வீடு திரும்பிய போது பிரதீபாவை காணவில்லை. அவரை தேடிய போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில் பிரதீபா அருகிலிருந்த குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ள குளத்திற்கு சென்று பார்த்த போது பிரதீபா உடல் மிதப்பது தெரியவந்தது. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டநிலையில், பிரதீபாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் பிரதீபா தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு திருமணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை, என்னுடைய இறப்பிற்கும் எனது பெற்றோருக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுகாரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்