search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் திருட்டு
    X
    பணம் திருட்டு

    மாநகராட்சி வளாகத்தில் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் திருட்டு

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் பாரதி உலா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் அவரிடம் கடன் கேட்டார். அந்த பணத்தை கொடுப்பதற்காக ராஜேந்திரன் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்து காத்திருந்தார். அவர் வந்ததும் பணத்தை கொடுத்துவிட்டு அங்கு அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரது கவனத்தை திசை திருப்பி பையில் மீதியிருந்த ரூ. 14 லட்சத்து 65 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டார்.

    பணத்தை பறிகொடுத்த ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 14 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×