என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதி நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது
Byமாலை மலர்6 Jan 2020 9:57 AM GMT (Updated: 6 Jan 2020 9:57 AM GMT)
திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 30). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 30-ந்தேதி நிறுவனத்தின் மேஜை அறையில் ரூ.23 ஆயிரம் வைத்துள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது ரூ.23 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்து ரவி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.
அப்போது அதில் பணம் திருடப்பட்ட அன்று வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கி நேராக நிதி நிறுவனத்திற்குள் செல்வதும், பின்னர் அதே காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் இருந்த வாலிபரின் தோற்றத்தை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சேட் தாவூத் (27) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 30). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 30-ந்தேதி நிறுவனத்தின் மேஜை அறையில் ரூ.23 ஆயிரம் வைத்துள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது ரூ.23 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்து ரவி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.
அப்போது அதில் பணம் திருடப்பட்ட அன்று வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கி நேராக நிதி நிறுவனத்திற்குள் செல்வதும், பின்னர் அதே காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் இருந்த வாலிபரின் தோற்றத்தை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சேட் தாவூத் (27) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X