search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் திருட்டு
    X
    பணம் திருட்டு

    நிதி நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது

    திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 30). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த 30-ந்தேதி நிறுவனத்தின் மேஜை அறையில் ரூ.23 ஆயிரம் வைத்துள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது ரூ.23 ஆயிரத்தை காணவில்லை.

    இதுகுறித்து ரவி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

    அப்போது அதில் பணம் திருடப்பட்ட அன்று வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கி நேராக நிதி நிறுவனத்திற்குள் செல்வதும், பின்னர் அதே காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் இருந்த வாலிபரின் தோற்றத்தை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சேட் தாவூத் (27) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×