search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.
    X
    பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.

    க.பரமத்தி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

    க.பரமத்தி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    க.பரமத்தி:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள மோளப்பாளையம் காலனி, இந்திரா நகர், அண்ணாநகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக காவிரி கூட்டு குடிநீர் சரியாக வினியோகிக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் மோளப்பாளையம் காலனியில் க.பரமத்தி-நொய்யல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×