search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை

    கோவையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் மைதிலி(வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த மைதிலி திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மைதிலியை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×