என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் அரசு கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்31 Dec 2019 9:24 AM GMT (Updated: 31 Dec 2019 9:24 AM GMT)
கோவையில் அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கருண்யா நகரை சேர்ந்தவர் செல்லதுரை. கூலித்தொழிலாளி. இவரது மகள் கவுசல்யா (வயது 18). இவர் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தனது தந்தையிடம் கவுசல்யா கூறி பணம் கேட்டார். கூலி வேலைக்கு செல்வதால் அவரால் பணத்தை உடனே தயார் செய்ய முடியவில்லை. கவுசல்யா தொடர்ந்து பணம் கேட்டு தந்தையை வற்புறுத்தினார்.
இதனால் தன்னிடம் பணம் இல்லை என்று செல்லதுரை கூறிவிட்டார். இதனால் விரக்தியடைந்த மாணவி வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காருண்யா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று கோவை கணபதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). பைக் டேக்சி ஓட்டி வந்தார். சமீபத்தில் சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கு இடையே நடந்து வந்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வந்தது. இதில் இவரது மனைவி விவாகரத்து பெற்றுச்சென்று விட்டார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த சதீஷ்குமார் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கருண்யா நகரை சேர்ந்தவர் செல்லதுரை. கூலித்தொழிலாளி. இவரது மகள் கவுசல்யா (வயது 18). இவர் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தனது தந்தையிடம் கவுசல்யா கூறி பணம் கேட்டார். கூலி வேலைக்கு செல்வதால் அவரால் பணத்தை உடனே தயார் செய்ய முடியவில்லை. கவுசல்யா தொடர்ந்து பணம் கேட்டு தந்தையை வற்புறுத்தினார்.
இதனால் தன்னிடம் பணம் இல்லை என்று செல்லதுரை கூறிவிட்டார். இதனால் விரக்தியடைந்த மாணவி வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காருண்யா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று கோவை கணபதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). பைக் டேக்சி ஓட்டி வந்தார். சமீபத்தில் சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கு இடையே நடந்து வந்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வந்தது. இதில் இவரது மனைவி விவாகரத்து பெற்றுச்சென்று விட்டார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த சதீஷ்குமார் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X