என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடன்குடி வட்டார பகுதியில் மழை
உடன்குடி:
வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காலம் என்பதாலும் தமிழகம் முழுவதும் மழை பரவலாக பெய்து வந்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட அதிக அளவில் பெய்துள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் தற்போது முடிந்து விட்டது. ஆனாலும் தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்தது. உடன்குடி வட்டார பகுதிக்குட்பட்ட பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, தண்டுபத்து, சீர்காட்சி, பிச்சுவிளை, செட்டியாபத்து, மெய்யூர், உதிரமாடன் குடியிருப்பு, பெரியபுரம், சிறுநாடார் குடியிருப்பு, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமானோர் மழையில் நனைந்தபடி சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் முக்கியமான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி வழியாக செல்ல பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்