என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பின்னால் வந்தபோது விபத்து: லாரி-சுவருக்கு இடையில் சிக்கிய லோடுமேன்
Byமாலை மலர்11 Dec 2019 5:17 PM GMT (Updated: 11 Dec 2019 5:17 PM GMT)
குடோனில் வேலைசெய்து கொண்டிருந்த லோடுமேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அவரது வலது கை லாரிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி கொண்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமல்வாசன் (வயது41). இவர் லோடு மேனாக வேலைசெய்து வருகிறார். நேற்று இவர் பெரியார்நகரில் உள்ள தனியார் மதுபான குடோனில் வேலைசெய்து கொண்டிருந்தார்.
அப்போது ஜெயக்குமார் என்பவர் தனது லாரியை பின்னோக்கி நகர்த்தினார். இதில் எதிர்பாராதவிதமாக லாரி சுவர் மீது மோதி கமல்வாசனின் வலது கை லாரிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி கொண்டது. இதனால் கமல்வாசன் வலதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது. இதனையடுத்து கமல்வாசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X