என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே மொய் பணம் - நகை கொள்ளை
Byமாலை மலர்10 Dec 2019 9:39 AM GMT (Updated: 10 Dec 2019 9:39 AM GMT)
சூலூர் அருகே 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் மொய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாகி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தற்போது சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அயோத்தியா நகரில் புதியதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
இவரது மகன் பாண்டியனுக்கு கடந்த மாதம் 11-ந் தேதி சிவகாசியில் திருமணமும் அதனை தொடர்ந்து 17-ந் தேதி கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றது.
வரவேற்பின் போது ஏராளமான வெள்ளி, பித்தளை பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பணமும் வந்தது.
இதனை வீட்டில் வைத்து பூட்டி விட்டு கடந்த 18-ந் தேதி முருகேசன் மற்றும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட அனைவரும் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்று விட்டனர்.
இன்று காலை முருகேசன் சிவகாசியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை, மொய் பணம் ரூ. 1 லட்சம், திருமணத்திற்கு உறவினர்கள் கொடுத்த வெள்ளி குத்துவிளக்கு , பித்தளை பொருட்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாகி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தற்போது சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அயோத்தியா நகரில் புதியதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
இவரது மகன் பாண்டியனுக்கு கடந்த மாதம் 11-ந் தேதி சிவகாசியில் திருமணமும் அதனை தொடர்ந்து 17-ந் தேதி கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றது.
வரவேற்பின் போது ஏராளமான வெள்ளி, பித்தளை பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பணமும் வந்தது.
இதனை வீட்டில் வைத்து பூட்டி விட்டு கடந்த 18-ந் தேதி முருகேசன் மற்றும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட அனைவரும் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்று விட்டனர்.
இன்று காலை முருகேசன் சிவகாசியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை, மொய் பணம் ரூ. 1 லட்சம், திருமணத்திற்கு உறவினர்கள் கொடுத்த வெள்ளி குத்துவிளக்கு , பித்தளை பொருட்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X