search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    காசிமேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை

    காசிமேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு, புதுகாமராஜ் நகரை சேர்ந்தவர் சமீம். தனியார் நிறுவன ஊழியர். இவர் குடும்பத்துடன் 4-வது மாடியில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். மாலையில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகை ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது. அங்கு இருந்த ஒரு பர்சில் ரூ.101-யை மட்டும் விட்டு சென்று இருந்தனர்.

    Next Story
    ×