என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து ஏமாற்றிவிட்டனர்- தீபா குற்றச்சாட்டு
Byமாலை மலர்6 Dec 2019 5:29 AM GMT (Updated: 6 Dec 2019 5:29 AM GMT)
ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிகை துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவினர் மீது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இணைப்பு நடைபெறவில்லை. எங்கள் பேரவையில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மற்றவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.
எனது கட்சியை நான் சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் வகையில் எங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும், பின்னர் பின்வாங்குவதுமாக இருக்கின்றனர். நீண்டகாலமாக அ.தி.மு.க.வுடன் தொடர் போராட்டம் நடத்தி அவர்களுடன் இணைத்துக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகும் கூட எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிகை துரோகம் செய்துவிட்டனர். மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்ற முயற்சி இனி என்னால் எடுக்கப்படாது. அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இணைப்பு நடைபெறவில்லை. எங்கள் பேரவையில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மற்றவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.
எனது கட்சியை நான் சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் வகையில் எங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும், பின்னர் பின்வாங்குவதுமாக இருக்கின்றனர். நீண்டகாலமாக அ.தி.மு.க.வுடன் தொடர் போராட்டம் நடத்தி அவர்களுடன் இணைத்துக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகும் கூட எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
தேர்தல் வந்தால் மட்டுமே இணைத்துக்கொள்வதாக கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் நாங்கள் தனித்து போட்டியிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்படி செய்வதாக கருதுகிறேன்.
ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிகை துரோகம் செய்துவிட்டனர். மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்ற முயற்சி இனி என்னால் எடுக்கப்படாது. அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X