என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
Byமாலை மலர்1 Dec 2019 5:48 PM GMT (Updated: 1 Dec 2019 5:48 PM GMT)
போளூர் அருகே தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
போளூர்:
போளூரை அடுத்த தும்பக்காடு மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை, கேரளாவில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தி. இவர், ஆரணியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்கிறார். இவர்களது 2-வது மகள் செவ்வந்தி (வயது 13), தும்பக்காடு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் செவ்வந்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் வசந்தி, செவ்வந்தியை கண்டித்து உள்ளார். எனவே மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X