search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் மாணிக்கவேல்
    X
    பொன் மாணிக்கவேல்

    சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படையுங்கள்- பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு

    சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்பதற்காக பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று அவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தமிழக அரசு அவருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    அந்த அரசாணையில், “சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×