என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பச்சிளம் பெண் குழந்தை தலையில் அடித்துக்கொலை- உசிலம்பட்டி தம்பதியிடம் விசாரணை
Byமாலை மலர்29 Nov 2019 2:03 PM GMT (Updated: 29 Nov 2019 2:03 PM GMT)
உசிலம்பட்டியில் பச்சிளம் பெண் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டது குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சம் பட்டியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 26). இவரது மனைவி ஜெயபிரியா (23). 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஜெயபிரியா கர்ப்பமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயபிரியா தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சைக்கு பிறகு தாயும், சேயும் வீடு திரும்பினர்.
குழந்தையின் வளர்ச்சி சற்று குறைந்து இருந்ததாலும் தலைப்பகுதியில் சிறிய அளவிலான கட்டி இருந்ததாலும் குழந்தையும், தாயும் சில வாரங்கள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறி வீட்டின் அருகே புதைத்து விட்டனர். ஆனால் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக மருத்துவ அதிகாரி சுசீலா உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பெண் குழந்தையின் மரணம் குறித்து மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையின் தலையில் தாக்கப்பட்ட காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து போலீசார் குழந்தையின் பெற்றோர் ஜெயச்சந்திரன்-ஜெய பிரியா மற்றும் உறவினர்களிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் பெண் குழந்தையின் சாவில் உள்ள மர்மம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X