என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சல் அருகே பள்ளி பூட்டை உடைத்து 12 லேப்-டாப் திருட்டு
Byமாலை மலர்28 Nov 2019 4:14 PM GMT (Updated: 28 Nov 2019 4:14 PM GMT)
குளச்சல் அருகே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 12 லேப்-டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நாகர்கோவில்:
குளச்சல் அருகே குன்னங்கல் பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 25 அரசு இலவச லேப்- டாப் வழங்கப்பட்டு இருந்தது. இந்த லேப்-டாப்களை பள்ளியின் ஒரு அறையில் வைத்திருந்தனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்த பின்னர் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் மறுநாள் பள்ளிக்கூடத்தை திறப்பதற்காக ஆசிரியர்கள் வந்தனர். அப்போது பள்ளி வகுப்பறையில் லேப்-டாப் வைக்கப்பட்டு இருந்த அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லால், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பள்ளியில் புகுந்த திருடர்கள் லேப்-டாப் இருந்த அறை பூட்டை உடைத்து அங்கிருந்த 12 லேப்-டாப்களை திருடி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X